வானுார்: வானுார் அருகே ஓடையில் லாரி டிரைவர் மர்மமான முறையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வானுார் அடுத்த குன்னம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் நீலமேலகம் மகன் ஆனந்தகுமார்,28; லாரி டிரைவர். இவர் கடந்த 1ம் தேதி காலை 5:00 மணிக்கு வேலைக்கு செல்வதாகக்கூறி விட்டு, வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அதே பகுதியில் கல் குவாரியையொட்டி உள்ள ஓடைப்பகுதியில் இருந்து துார்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஆனந்தகுமார் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து தகவலறிந்த வானுார் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த ஆனந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர் ஓவராக குடித்ததில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, வானுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE