விழுப்புரம்: சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு இன்று, இறுதி நாள் என்பதால் பலத்தை நிருபிக்க அ.தி.மு.க.,-தி.மு.க.,வினர் பிரமாண்ட ஊர்வலத்தில் ஈடுபடவுள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, விழுப்புரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.,வில் சண்முகம், தி.மு.க.,வில் லட்சுமணன், அ.ம.மு.க.,வில் பாலசுந்தரம் உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், பிரசாரம் இன்று இரவு 7:00 மணியோடு நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.,-தி.மு.க.,-அ.ம.மு.க., வினர் தங்களின் பலத்தை நிருபிக்க நகரில் இறுதிகட்ட பிரசாரமாக பிரமாண்டஊர்வலம் நடத்துகின்றனர்.இதில், அ.தி.மு.க.,வினர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு நகராட்சி திடலில் முடிக்கின்றனர். இதேபோன்று, தி.மு.க.,வினர் மாலை 3:00 மணிக்கு ரயில் நிலையத்தில் துவங்கி நான்குமுனை சிக்னலில்முடிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE