செஞ்சி: மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டதும் ஆயிரம் மடங்கு வளர்ச்சி திட்டம் கொண்டு வருவேன் என தி.மு.க., வேட்பாளர் மஸ்தான் பிரசாரம்செய்தார்.செஞ்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் மஸ்தான் நேற்று முன்தினம் மேல்மலையனுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது. கடந்த 10 ஆண்டுகளில் செஞ்சி தொகுதிக்கு ஆளும் கட்சி எந்த வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை.அரசு கல்லுாரி வேண்டும் என பல முறை சட்டசபையில் கேட்டும் ஆளும் கட்சி செவி சாய்க்கவில்லை. எம்.எல்.ஏ., என்ற முறையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும். அவற்றை நிறைவேற்ற போராட வேண்டி இருந்தது. மீண்டும் தேர்வு செய்தால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வாக தொகுதிக்கு ஆயிரம் மடங்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன். மேல்மலையனுாரில் குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகளை மேம்படுத்தி வளர்ச்சியடைந்த நகரமாக மாற்றுவேன்.இவ்வாறு மஸ்தான் பேசினார்.இதில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்ரமணியன், விவசாய அணி கணேசன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE