அவிநாசி:ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் வகையிலான, 'ஜல் ஜீவன்' திட்ட பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, மக்கள் தொகை குறைந்த பகுதிகளில், குடிநீர் தேக்க தொட்டி, போர்வெல், குழாய் பொருத்தும் பணி நடந்து வருகிறது.'இப்பணியை துவக்கி, மூன்று மாதத்துக்குள் முடித்து விட வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ள நிலையில், குறுகிய கால டெண்டர் மூலம், பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட சில நிர்வாக காரணங்களால், பணியில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.இதற்கிடையில், பணியை ஆய்வு செய்வது, பில் தொகை வழங்குவது போன்ற பணிகளை, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டிய நிலையில், தற்போது, அவர்களுக்கு தேர்தல் பறக்கும் படை பிரிவு உள்ளிட்ட தேர்தல் சார்ந்த பணி வழங்கப்பட்டுள்ளது.இதனால், பல ஊராட்சிகளில், ஜல் ஜீவன் திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 'ஓட்டுப்பதிவுக்கு பின் பணி சூடுபிடிக்கும்' என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE