கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடி பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளாக உளுந்துார்பேட்டை தொகுதியில்-51, சங்கராபுரம்-6, கள்ளக்குறிச்சி-2 என மொத்தம் 56 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.பதற்ற ஓட்டுச்சாவடி மையம் உள்ள பகுதிகளில் அந்தந்த டி.எஸ்.டி.,க்கள் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சித்தலுர் கிராமம் வகுப்புவாத மோதல் நிறைந்த பதட்டமான ஓட்டுச்சாவடியாக கண்டறியப்பட்டு உள்ளது.அதனைத் தொடர்ந்து சித்தலுார் மற்றும் விருகாவூர் கிராமங்களில் டி.எஸ்.பி., ராமநாதன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE