விருத்தாசலம்: விருத்தாசலத்தில் போட்டியிடும் காங்., வேட்பாளருக்கு ஆதரவாக, தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு சேகரித்தனர்.நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். விருத்தாசலம் பாலக்கரையில் கட்டட தொழிலாளர்கள், உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள், பொது மக்களிடம் ஓட்டு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்.வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு மகளிர் கல்லுாரி, தொழில்நுட்பக் கல்லுாரிகள், கல்வியியல், செவிலியர் பயிற்சி கல்லுாரி, புறநகர் பஸ் நிலையம் உள்ளிட்ட தேவைகளுக்கு சட்டசபையில் குரல் கொடுத்து, அவற்றை நிறைவேற்றித் தருவார். அதற்கு தி.மு.க., உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தனர்.மாவட்ட துணைச் செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர்கள் ராமு, நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், நிர்வாகிகள் காந்தி, சுந்தரமூர்த்தி, வெங்கடேசன், பக்கிரிசாமி, காங்., ராஜன், ரஞ்சித்குமார், வி.சி., அய்யாயிரம், முருகன், த.வா.க., சேகர், மா.கம்யூ., அசோகன், ம.தி.மு.க., - முஸ்லிம் லீக், ம.ம.க., உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE