திருப்பூர்:தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சொந்தஊர் செல்ல வசதியாக சிறப்பு பஸ் இயக்கம் துவங்கியுள்ளது. நேற்று எதிர்பார்த்த அளவு கூட்டமில்லை. நாளை கூட்டம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தேவையான விழிப்புணர்வு, முன்ஏற்பாட்டு பணிகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.அவ்வகையில் வாக்காளர்கள் சொந்தஊர் சென்று ஓட்டளிக்க வசதியாக 3 முதல், 6ம் தேதி வரை மாநிலம் முழுதும் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.அவ்வகையில், திருப்பூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலை, சேலம், மதுரை, திருச்சிக்கு, 80 பஸ்கள் இயக்கப்படுகிறது; 40 பஸ் தயார் நிலையில் உள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'நேற்று மாலை வரை பஸ்களில் எதிர்பார்த்த கூட்டமில்லை. 4ம் தேதியும்(இன்று), 5ம் தேதியும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE