பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கரும்பூரில் அ.தி.மு.க., பிரமுகரிடம் இருந்து 43 ஆயிரத்து 500 ரூபாயை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.பண்ருட்டி தொகுதி தேர்தல் பறக்கும்படை குழுவினர் ருக்மணி தலைமையில் நேற்று கரும்பூர் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, பறக்கும் படையினரைப் பார்த்ததும் ஒருவர் தப்பியோட முயன்றார்.உடன் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். அதில், அவர், வடலுார், பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ராஜாராம், 67; என்பதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.அவரிடம் இருந்த 43 ஆயிரத்து 500 ரூபாயை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்து பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE