ஆமதாபாத் : இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை, நம் எல்லை பாதுகாப்புப் படையினர், பாக்., ராணுவத்திடம், நேற்று ஒப்படைத்தனர்.
ராஜஸ்தானில், சர்வதேச எல்லை பகுதியோரம் அமைந்துள்ள பர்மர் மாவட்டத்தில், எல்லைச் சாவடிக்கு அருகே, நேற்று முன்தினம், கரீம் என்ற, 8 வயது பாகிஸ்தான் சிறுவன், தவறுதலாக, இந்திய எல்லைக்குள் நுழைந்தான். அங்கிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், அந்த சிறுவனை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும், ஆயுதங்களுடன் இருந்த நம் ராணுவத்தினரை பார்த்த பயத்தில், அச்சிறுவன் அழுதான்.அதன்பின், சிறுவனை சமாதானம் செய்த ராணுவத்தினர், உணவும், குடிநீரும் வழங்கினர். அந்த சிறுவன், வழித் தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது.இந்நிலையில், அந்த சிறுவனை, பாகிஸ்தான் ராணுவத்திடம், நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்று ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE