புதுடில்லி : மேற்கு வங்கத்தில், நான்காம் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், 22 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.
இம்மாநில சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வரும், 10ம் தேதி நடக்கும் நான்காம் கட்டத்தில், 44 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நான்காம் கட்டத் தேர்தலில் போட்டியிடும், 373 வேட்பாளர்களில், ஒரு சுயேச்சை வேட்பாளர் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை. மற்ற, 372 வேட்பாளர்கள் அளித்துள்ள விபரங்களை ஆய்வு செய்ததில், அதில், 81 பேர் மீது, அதாவது, 22 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
மொத்த வேட்பாளர்களில், 17 சதவீதம் பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. வேட்பாளர்களில், 65 பேர் கோடீஸ்வரர்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE