காட்டுமன்னார்கோவில்: பொது இடத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறி சுவர் விளம்பரம் செய்த வி.சி., கட்சியினர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் வி.சி., கட்சி வேட்பாளரை ஆதரித்து ரம்ஜான் தைக்கால், சாலைக்கரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொது இடம் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டட சுவர்களில், விளம்பரம் செய்துள்ளனர்.இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE