கடலுார்: கடலுாரில் வேன் டிரைவரை மண் வெட்டியால் வெட்டிய பெயிண்டரை போலீசார் கைதுசெய்தனர்.கடலுார், உண்ணாமலை செட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் ராஜா, 40; பெயிண்டர். இவருக்கு சொந்தமான வீட்டில், சிவக்குமார், 35; வேன் டிரைவர் வாடகைக்கு தங்கியுள்ளார். நேற்று முன்தினம் ராஜாவிடம் வீட்டில் பாத்ரூம் கதவு மற்றும் மின்சார ஒயரை மாற்றித்தருமாறு சிவக்குமார் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இந்நிலையில், அன்று இரவு வீட்டில் இருந்த சிவக்குமாரின் தலையில், மண் வெட்டியால் ராஜா தாக்கினார். பலத்த காயமடைந்த சிவக்குமார், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE