விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பறக்கும்படை அதிகாரிகளைப் பார்த்ததும் 13 லட்சத்து 99 ஆயிரத்து 600 ரூபாயுடன் பைக்கை விட்டு தப்பியோடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் தொகுதியில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் லெனின் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் உள்ளிட்ட குழுவினர், விருத்தாசலம் வி.என்.ஆர்., நகரில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு நின்றிருந்த கும்பல், அவர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.அங்கிருந்த ேஹாண்டா ஆக்டிவா பைக்கை சோதனை செய்தனர். அதில், பண்டலாக பேக்கிங் செய்யப்பட்ட நிலையில், பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டலை பிரித்து பார்த்தபோது, 100, 200, 500 என ரூபாய் 13 லட்சத்து 99 ஆயிரத்து 600 ரூபாய் இருந்தது தெரியவந்தது. உடன் பணம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். பைக்கை போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் கலரங்குப்பம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்ற 33 மது பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பண்ருட்டிபண்ருட்டி தொகுதியில் பறக்கும் படை கல்யாணி தலைமையிலான குழுவினர் நேற்று பூண்டி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கட்டமுத்துப்பாளையத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம் என்பவர் வைத்திருந்த ஒரு லட்சத்து 5,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். பணத்தை பண்ருட்டி தாசில்தார் பிரகாஷிடமும், சண்முகத்தை புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE