கான்பூர் : உத்தர பிரதேசத்தில், மொபைல் போனில் பேசியபடி, ஒரு பெண்ணுக்கு, ஒரே நேரத்தில், இரண்டு, 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்ஸ் குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, கான்பூர் தேஹத் மாவட்டம் அக்பர்பூர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் குமாரி, 50, சமீபத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்றார். அங்கிருந்த உதவி நர்ஸ் அர்ச்சனா, மொபைல் போனில் பேசிக்கொண்டே, அவருக்கு தவறுதலாக இரண்டு, 'டோஸ்' தடுப்பூசிகளை செலுத்திஉள்ளார்.இதனால், கமலேஷ் குமாரி கையில் வீக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து கமலேஷ் குமாரி கேட்டபோது, தன் தவறை உணராத அர்ச்சனா, அவருடன் தகராறு செய்தார். தகவல் அறிந்த மாவட்ட மருத்துவ அதிகாரி, நடந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை முடிவில், நர்ஸ் அர்ச்சனா மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE