பீஜப்பூர் : சத்தீஸ்கரில், நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள், நேற்று வீர மரணம் அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பீஜப்பூர் மாவட்டம் டாரெம் பகுதி யின் சிலேகர் வனப்பகுதியில், நக்சலைட்டுகள், பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.இதில், ஐந்து பாதுகாப்பு படையினர், வீர மரணம் அடைந்தனர்;
மேலும், 12 பேர் காயம்அடைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை தொடரும் நிலையில், பெண் நக்சல் ஒருவர் கொல்லப்பட்டதாக, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE