மூணாறு : கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைசில நாட்களாக இரண்டு ஆயிரத்தை தாண்டுகிறது.
கொரோனா சோதனையின் எண்ணிக்கை குறைந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 51,783 பேருக்கு நடந்த சோதனையில் 2508 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 44,779 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது.அதில் சுகாதாரத்துறை ஊழியர்கள் 11 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 108பேர்,தொடர்பு மூலம் 2261பேர், தொற்று பரவிய விதம் அறியாமல் 161 பேர் என 2541பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 11,00,274பேர் குணமடைந்தனர். 27,274பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 12பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 4658ஆக அதிகரித்தது.-----------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE