கோவை:தமிழக சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, ஆந்திர மாநில ஊர்காவல் படையினரை அழைத்து வர, 38 பஸ்கள் சென்றுள்ளன.தமிழகத்தில், ஒரே கட்டமாக வரும், 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுப்பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் தேவை, கடந்த தேர்தலை காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது.இதனை சமாளிக்க, அண்டை மாநில போலீசாரின் உதவி கோரப்பட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் ஆந்திரா மாநில ஊர்காவல் படையினர் பணியாற்ற உள்ளனர்.மாநகர பகுதியில், 1,700 பேரும், மாவட்ட பகுதிகளில், 1,300 பேர் என, மொத்தம், 3 ஆயிரம் பேர் பணியாற்ற உள்ளனர். இவர்களை, ஆந்திராவில் இருந்து கோவை அழைத்து வர, கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்திலிருந்து, 38 பஸ்கள் ஆந்திரா சென்றன. இங்கு வந்த பின், தொகுதி வாரியாக பிரித்து தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில போலீசார், துணை ராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE