கோவை:கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வழங்க வேண்டும். பெரும்பாலான நிலை அலுவலர்கள், சிலருக்கு மட்டும் பூத் சிலிப் வழங்கி விட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரை அணுகி, ஒட்டுமொத்தமாக ஒப்படைத்து விடுகின்றனர்.அல்லது, குறிப்பிட்ட இடத்தில், கட்சியினருடன் அமர்ந்து கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை வரச்சொல்லி, பூத் சிலிப் வழங்குகின்றனர். கட்சியினர் உதவியை நாடாமல், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, பூத்சிலிப் வழங்க வேண்டும் என, கலெக்டருக்கு புகார் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து, சம்பந்தப் பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு, அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப் வினியோகிப்பது அவசியம் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE