கோவை:கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 150 முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, இம்மாணவர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போதிய வசதி செய்து கொடுக்காததால், அதிருப்தி அடைந்த மாணவர்கள், மருத்துவமனை டீன் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், 'கொரோனா பணியில் ஈடுபடுவோருக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. விடுதியில் இருந்து உணவு எடுத்து வந்து, சாப்பிடச் சொல்கின்றனர். கொரோனா வார்டில் பணி செய்து விட்டு, விடுதிக்குச் சென்றால், மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. முக்கிய உடல் உறுப்பில் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு வழங்க, போதிய மருந்து இல்லை. கேட்டால், அரசு நிதி ஒதுக்காததால், மருந்து வரவில்லை என்கின்றனர். இதுதவிர, கடந்த இரு மாதமாக எங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படவில்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE