கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 148 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கோவையில், நேற்று 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 59 ஆயிரத்து 821 ஆக உயர்ந்தது. மேலும், நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 694 ஆக உள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 148 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.கோவையில், இதுவரை 57 ஆயிரத்து 120 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 2,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE