கோவை:கமல் வருகைக்காக மூன்று மணி நேரம் காத்திருந்தும், அவர் வராததால் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பினர்.கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சிங்காநல்லுார் தொகுதி அவரது கட்சி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.
சித்தாபுதுார், ஆவாரம்பாளையம், பீளமேடு, சிங்காநல்லுார், வரதராஜபுரம், கள்ளிமடை, சவுரிபாளையம், புலியகுளம், சுங்கம் சந்திப்பு, ரெட்பீல்டு வழியாக பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். புலியகுளம், விநாயகர் கோவில் அருகில் மாலை 7:00 மணி முதல் பொதுமக்கள் காத்திருந்தனர்.கூட்டத்தை சேர்க்க தாரை, தப்பட்டை, சிலம்பாட்டம், கமல் வேடமணிந்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற நிகழ்ச்சிகள் ரோட்டோரத்தில் நடத்தப்பட்டது. ஆனால், கமல் அதோ வருகிறார்... இதோ வருகிறார்... இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவார், என அறிவித்து கொண்டே இருந்தனர். ஆனால் இரவு 10:00 மணி ஆகியும் அவர் வரவில்லை. பிரசார நேரம் முடிந்து விட்டதால் புலியகுளம் வராமல் ஓட்டலுக்கு திரும்பினர். இதனால் மூன்று மணிநேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE