கோவை:கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதி தி.மு.க., வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவருக்காக, கட்சியின் நட்சத்திர பேச்சாளர் லியோனி, கடந்த மாதம் குனியமுத்துார் பகுதியில் பிரசாரம் செய்தார்.அப்போது பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசினார். இதற்கு மகளிர் அமைப்பினர் மட்டுமின்றி பெண்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை, திரு.வி.க., வீதி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, ஹிந்து மக்கள் கட்சி(தமிழகம்) மாநில பொது செயலாளர் செந்தில்குமார், தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்தார்.இது குறித்து, வழக்கு பதிவு செய்ய, குனியமுத்துார் போலீசாருக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது. இதையடுத்து போலீசார், லியோனி மீது பெண்களை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE