மாதவரம்: மனைவி இறந்த மன உளைச்சலில் இருந்த கணவன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.மாதவரம், பொன்னியம்மன்மேடு, அய்யர் தோட்டம், 2வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 37. அவரது மனைவி, சில மாதங்களுக்கு முன், திடீர் மாரடைப்பால் இறந்தார்.இதனால், மன உளைச்லுக்கு ஆளான சரவணன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், மார்ச் 8ம் தேதி, வீட்டில் இருந்து மாயமானார்.அவரது பெற்றோர், பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர்கள், 10ம் தேதி, மாதவரம் போலீசில் புகார் செய்தனர். சரவணனை, போலீசார் தேடிவந்தனர்.இந்நிலையில், அவரது வீட்டருகே உள்ள கிணற்றில், நேற்று முன்தினம் மாலை, துர்நாற்றம் வீசியது. இது குறித்து, மாதவரம் போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன சரவணனின் சடலம், அழுகிய நிலையில் கிடந்தது.மன உளைச்சல் காரணமாக, அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE