காஞ்சிபுரம்; தேர்தலை முன்னிட்டு, மூன்று நாட்கள், 'டாஸ்மாக்' கடைகள் விடுமுறை என்பதால், 'குடி'மகன்கள், முண்டியடித்து மதுபாட்டில் வாங்கி சென்றனர். சட்டசபை தேர்தல், நாளை மறுநாள் நடைபெற இருப்பதால், இன்று முதல், மூன்று நாட்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து மதுக்கடைகளிலும், நேற்று மதியம், கடை திறந்ததில் இருந்து, வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது. ஒவ்வொருவரும், குறைந்தது, நான்கு பாட்டில் வாங்கிச் சென்றனர்.தவிர, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோரை கவனிக்க, அந்தந்த கட்சி நிர்வாகிகள், ஏராளமான மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.இதனால், பல கடைகளில், மது தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பிட்ட சில பீர், மது வகைகள், கடைகளில் இல்லை என, புகார் எழுந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE