மதுரை, மதுரையில் கலெக்டர் அன்பழகனை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், நீதிராஜா, பொற்செல்வன் உள்ளிட்டோர் சந்தித்தனர். 'ஏப்., 6 தேர்தல் ஓட்டுப்பதிவின்போது அரசு ஊழியர்கள் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை பணிபுரிவர். ஓட்டுப்பெட்டிகளை அனுப்பி பணி முடிந்து திரும்ப மறுநாள் கூட ஆகி விடும். எனவே மறுநாள் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அனுமதிக்க வேண்டும்,' என, அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE