திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் தேர்தல் அன்று ஒரு ஓட்டுச்சாவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க இரண்டு தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.458 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் 916 பேருக்கு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் சார்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தல் அலுவலர் முருகேஸ்வரி, உதவி அலுவலர்கள் மூர்த்தி, அனீஷ்சத்தார், கோபி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன் பயற்சி அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE