விழுப்புரம், : விழுப்புரத்தில் பிரதான சாலையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் இறுதிகட்ட பிரசார ஊர்வலத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் நேற்றிரவு 7:00 மணியோடு நிறைவடைந்தது. இதற்காக, விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று மாலை இறுதிகட்ட பிரசார ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நான்குமுனை சிக்னல் வரை நேற்று மாலை 4:00 மணிக்கு தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்றனர்.இதற்காக, மாலை 3:00 மணி முதல் ரயில் நிலையத்தில் தி.மு.க.,வினர் குவிந்தனர். இதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு ரயில் நிலையத்தில் இருந்து நான்குமுனை சிக்னல் வரை அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்றனர்.
இதற்காக, மாலை 4;00 மணி வரை அ.தி.மு.க.,வினர் குவிந்தனர். இதனால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஊர்வலத்தின்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி, கடலுார் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE