சிதம்பரம் : சிதம்பரத்தில் பைக் பிரசாரத்திற்கு அனுமதி தராததால் ஆத்திரமடைந்த அ.ம.மு.க., வினர் மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணியில் இந்திய தேசிய முஸ்லீம் லீக், அ.ம.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அப்போது அ.தி.மு.க., வினர் மட்டும் பைக் பிரசாரம் செய்த நிலையில், தங்களுக்கு பைக் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கவில்லை என கூறி அ.ம.மு.க., வினர் சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டு, போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.அவர்களை சிதம்பரம் நகர சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார், சமாதானம் செய்து, அனுப்பினர். பிரசாரம் முடிவடையும் நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன் முன், அ.ம.மு.க., வினர் மறியல் செய்ததால், பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE