திண்டிவனம் : திண்டிவனத்தில் அ.தி.மு.க.,-தி.மு.க., இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனத்தில் நேற்று தி.மு.க., வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கத்தை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு தி.மு.க., கூட்டணி கட்சியினர் பைக்கில் ஊர்வலம் சென்றனர். ரோஷணை பாட்டை பிள்ளையார் கோவில் அருகில் சென்றபோது, அங்கிருந்த அ.தி.மு.க.,வினருக்கும், தி.மு.க.,வினருக்கும் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினும் தாக்கிக் கொண்டனர்.அதில், அ.தி.மு.க., பிரமுகரான கரியன் தெருவைச் சேர்ந்த நாகராஜன்,65; உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE