பொள்ளாச்சி:வீடுவீடாக சென்று, வாக்காளர் தகவல் சீட்டுகளை வினியோகிக்க வேண்டும் என, பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.நாளை தேர்தல் நடக்கவுள்ள உள்ள நிலையில், வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது. இப்பணியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டு, வீடுவீடாக சென்று, வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது.
தொகுதி நிலை அலுவலர்கள், ஒரு சிலருக்கு மட்டும் வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்கிவிட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினரை அணுகி, ஒட்டு மொத்தமாக அவர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.இது சட்டப்படி குற்றமாகும். கட்சியினரின் உதவியை நாடாமல், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக சென்று, வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அதிகாரி, அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று, வாக்காளர் தகவல் சீட்டுகளை வினியோகிக்க வேண்டும், என, உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE