கச்சிராயபாளையம், : சங்கராபுரம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் ராஜா, வடக்கனந்தல் அம்மபாளையத்தில் மகளிருடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டினார்.
சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் ராஜா தொகுதிக்குட்பட்ட வடக்கனந்தல் அம்மாபாளையத்தில் மகளிர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அப்பகுதியில் நிலவும் குறைகளை கேட்டறிந்து, வெற்றி பெற்றதும் தொகுதிக்காகவும், வடக்கனந்தல் பகுதி மக்கள், விவசாயிகளின் நலனுக்காகவும் செய்ய உள்ள திட்டங்கள், வாக்குறுதிகளை கூறினார்.
அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., வில் குடும்ப தலைவிகளின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை தெரிவித்து, வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தி, தொகுதியில் தொழிற்சாலை அமைத்து உங்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தப்படும். இப்பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.உங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே என்னால் இதை செய்ய முடியும், நீங்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடமும் தெரிவித்து மாம்பழ சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள், இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி என வேட்பாளர் ராஜா பேசினார்.
தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணையத் தலைவர் ராஜசேகர், நகர செயலாளர் கருப்பன், பா.ம.க., மாநில துணை பொது செயலாளர் ரமேஷ், தொகுதி பொறுப்பாளர் தங்க அய்யாசாமி, துணைத் தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சரவணன், அமைப்பு செயலாளர் பப்லு, மற்றும் பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE