திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் பா.ஜ., வேட்பாளர் கலிவரதன் இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.திருக்கோவிலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., சார்பில் கலிவரதன் போட்டியிடுகிறார்.
இவர், கூட்டணி கட்சியினருடன் தொகுதி முழுவதும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரசாரம் மேற்கொண்டார்.நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி, நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. அதைனையாட்டி, பா.ஜ., வேட்பாளர் கலிவரதன் நேற்று மாலை 6:00 மணிக்கு மார்க்கெட் வீதியில் இருந்து அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக நடந்து சென்று இறுதிகட்ட பிரசாரத்தை நான்கு முனை சந்திப்பில் நிறைவு செய்தார்.இறுதிகட்ட பிரசார ஊர்வலத்தில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE