சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சங்கராபுரம் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடந்து வருகிறது.இப் பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு ஆய்வு செய்தார். பின்னர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பும் பணியை ஆய்வு செய்தார். ஆய்வின்போது சங்கராபுரம் தாசில்தார் சையத் காதர், வருவாய் ஆய்வாளர் திருமலை, வி.ஏ.ஓ., நிமிலன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE