உடுமலை:உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் - 2ல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர், உடுமலை அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் நூலகர் வாசகர் வட்டம், சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டதுசித்த மருத்துவ பிரிவு மருத்துவர் லட்சுமிபதி ராஜ் வழிகாட்டுதலின்படி, இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நூலகர் கணேசன் தலைமை வகித்தார்.வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவகுமார், முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 400 பேர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE