நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில், கடந்த, 30ம் தேதி, புறநகர் ரயிலில் ஆசிய வம்சாவளி பெண் ஒருவர், தன் மூன்று குழந்தைகளுடன் பயணித்தார். அப்போது, இனவெறி பிடித்த, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த பெண்ணை, கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அவர் மீது எச்சில் துப்பியும், அவரது மொபைல் போனை வெளியே எறிந்தும் மோசமான செயல்களில் ஈடுபட்டார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரை, தேடும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE