அன்னூர்:மாவட்ட அளவிலான போட்டியில், கெம்ப நாயக்கன்பாளையம் அரசு பள்ளி இரண்டாம் இடம் பெற்றது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் (இடைநிலை) சார்பாக, நடப்பு கல்வியாண்டிற்கான அரசு பள்ளிகளில், இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, இணையவழி வாயிலாக, வினாடி வினா மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டிகளில், கெம்பநாயக்கன்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீ மாலினி, கோவை வருவாய் மாவட்ட அளவில், இரண்டாமிடம் பெற்றார்.யோகா போட்டியில் இப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர் பிரின்ஸ் சர்க்கார், எஸ்.எஸ். குளம் கல்வி மாவட்ட அளவில், முதல் இடமும், கோவை வருவாய் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார், சாதித்த மாணவிக்கு, ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் பென் டிரைவ் வழங்கப்பட்டது. மாணவருக்கு, யோகா உபகரணமும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சாதித்த, மாணவ, மாணவியரை, பள்ளி தலைமையாசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE