புதுக்கோட்டை: புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர், பிரசாரத்தை பாதியில் விட்டுவிட்டு, பெண்ணின் ஆப்பரேஷனுக்காக, ரத்ததானம் செய்ய சென்றது,
அனைவரையும் கவர்ந்தது.புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூர்த்தி, நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது, பொன்னமராவதியை சேர்ந்த பழனியப்பன், 30 என்பவர், தன் தாய் பழனியாயி, 65, என்பவரின் ஆப்பரேஷனுக்காக, 'ஏ பாசிட்டிவ்' ரத்தம் தேவைப்படுகிறது. அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ளார். உதவுங்கள் என, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூர்த்தியிடம், மொபைல் போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.உடனடியாக, பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு, பிரசார வாகனத்திலேயே மருத்துவமனைக்கு சென்ற வேட்பாளர் மூர்த்தி, தானே ரத்ததானம் செய்தார். இவர், 65வது முறையாக, நேற்று ரத்ததானம் செய்தார். வேட்பாளர் மூர்த்தியின் செயலை, அனைவரும் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE