காரைக்கால்,: காரைக்காலில், கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பள்ளி பஸ்கள், திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாயின.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், கல்வித் துறை சார்பில், 1 ரூபாய் கட்டணத்தில், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு முதல் பஸ்கள் இயக்கவில்லை. இதனால், ஓராண்டாக, கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று, கீழகாசாகுடி சிவன் கோவில் அருகில் நிறுத்தியிருந்த மூன்று பஸ்களில் ஒன்றில், திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகில் நிறுத்தி வைத்திருந்த இரு பஸ்களிலும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.ஆயினும், மூன்று பஸ்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. பஸ்களுக்கு தீ வைத்தது யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE