கோவை:புதிய தபால் ஆயுள் காப்பீடுதாரர்களை கவரும் வகையில், 'வெல்கம் லெட்டர்' வழங்க வேண்டும் என, தபால் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என இரண்டு வகையான காப்பீடு திட்டங்களை, தபால்துறை வழங்கி வருகிறது. குறைந்த பிரீமியம், அதிக போனஸ், வருமான வரி விலக்கு போன்ற காரணங்களால், தபால் காப்பீடு திட்டத்திற்கு நல்ல வரவேற்புள்ளது.இந்நிலையில், புதிய காப்பீட்டாளருடனான வணிக உறவை மதிப்புடன் தொடங்கும் வகையில், புதிதாக 'வெல்கம் லெட்டர்' எனும் வரவேற்பு கடிதத்தை வழங்க வேண்டும் என, தபால் காப்பீட்டு இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE