அவிநாசி,:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் செயல் அலுவலர் மேனகா, அவிநாசி செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி ஆகியோர் முன்னிலையில், கோவில் வளாகத்தில் உள்ள, 15 உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் இருந்த பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கை பொருட்கள் எண்ணப்பட்டன.இதில், '202 கிராம் தங்கம், 170 கிராம் வெள்ளி மற்றும், 19 லட்சத்து 88 ஆயிரத்து 445 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த னர்,' என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE