அவிநாசி:அவிநாசி மதுவிலக்கு போலீசார், பல்வேறு இடங்களில், மது பாட்டில் விற்ற வர்களை கைது செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, பல்லடத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் வடுகபாளையம் பகுதியில், அவிநாசி மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த காரில், 480 மதுபாட்டில் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், திருப்பூர், நீதியம்மாள் நகரை சேர்ந்த முருகேசன், 39, தெற்குப்பாளையம் சுந்தர்ராஜன், 42 ஆகியோரை, கைது செய்த மதுவிலக்கு போலீசார், காரையும் செய்யப்பட்டது.நேற்று நடந்த சோதனையில், அவிநாசி கைகாட்டிபுதுார் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த திருவிடைமருதுார் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 29 என்பவரிடம் இருந்து, 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல, கருவலூர் -- அன்னுார் ரோட்டில், மது விற்பனை செய்து கொண்டிருந்த கருவலுாரை சேர்ந்த கிருஷ்ணன் 33, என்பவரிடமிருந்து, 30, அவிநாசி - ராஜாஜி நகரில் சின்னேரிபாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரிடமிருந்து, 28 பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE