திருப்பூர்:ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்' வைக்கப்படும்.ஓட் டுச்சாவடி அலுவலர்களிடம் இருந்து, மண்டல தேர்தல் அலுவலர்கள் பெற்று வரும், ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.மண்டலம் வாரியாக வரும் தேர்தல் அலுவலர்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள, தொகுதி வரவேற்பு அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலர்கள் அதனை சரிபார்த்து பெற்று, 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைப்பார்கள்.ஓட்டு எண்ணிக்கை மைய வரவேற்பு அறை அலுவலர்கள், தேர்தல் பொருட்களை பெற்று, 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைப்பது குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.திருப்பூர் வடக்கு தொகுதிக்கான பயிற்சி முகாம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், வரவேற்பு அறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி விவரங்களை எடுத்துரைத்தார். அலுவலர்கள், தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE