திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக, 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 19 ஆயிரத்து, 653 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும், 42 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 18 ஆயிரத்து, 893 பேர் குணமடைந்தனர். தற்போது, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 533 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று, 62 வயது உள்ள ஆண், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாவட்டத்தில், இதுவரை, 227 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, மீண்டும் மூன்று இலக்கில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE