பல்லடம்:பல்லடம் சட்டசபை தொகுதியில் நடந்த வாகன சோதனைகளில், 'விவசாயிகள், வியாபாரிகள் உள் ளிட்ட, ஏழு பேரிடம், 6.21 லட்சம் ரூபாய் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'பறக்கும் படை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட, 6.21 லட்சம் ரூபாய், கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளர்களிடம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், 4.42 லட்சம் ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 1.78 லட்சம் ரூபாய்க்கு உரியவர்கள் ஆவணங்களை இன்னும் சமர்ப்பிக்காததால் மாவட்ட கருவூலத்தின் கட்டுப்பாட்டில் இத்தொகை உள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE