திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையில் நடத்திய சோதனையில், செரீப் காலனி பகுதியில் பைக்கில் வந்த கணேஷ் பாபுவிடம், 2.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நிலைக்கண்காணிப்பு குழு மைதிலி தலைமையில் நடத்திய சோதனையில், காசிபாளையம் பகுதியில் செல்வம் என்பவரிடம், 1.79 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இருவரும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதற்காக கொண்டு சென்ற பணம் என தெரிவித்தனர். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE