ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 16 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நீலகிரியில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நேற்று, 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவது, சுகாதார துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுவரை, தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8,742 ஆனது. நேற்று, 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 8,544 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 50 ஆக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE