கோவை அருகே பணம் பட்டுவாடா செய்த, அ.தி.மு.க.,வினர் மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை மாவட்டம், சூலுார் தொகுதிக்கு உட்பட்ட காடாம்பாடி ஊராட்சியில் வீடு, வீடாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக, தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு சென்ற பறக்கும் படையினர், சமுதாய கூடம் அருகே நின்றிருந்த மூவரை விசாரித்தனர்.அவர்கள் கையில் இருந்த நோட்டில் பூத் சிலிப்புகள் இருந்தன. மேலும், அ.தி.மு.க., நோட்டீஸ்களும், 4,500 ரூபாய் பணமும் வைத்திருந்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து, பணத்துடன் மூவரும் சூலுார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.விசாரணையில், அவர்கள் காடாம்பாடி மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்த, ராமசாமி, 37, வினோத்குமார், 32, சுரேஷ், 23 என தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE