மாமல்லபுரம் : ஓட்டுச்சாவடி அமைவிட பகுதிகளில், மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை ஆய்வு செய்து சீரமைத்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல், நாளை நடக்கிறது. வாக்காளர்கள், காலை, 7:00 - மாலை, 7:00 மணி வரை, ஓட்டு அளிக்கின்றனர். ஓட்டுச்சாவடிகளில், குடிநீர், கழிப்பறை, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் என, ஏற்படுத்தப்பட்டன.ஓட்டுப்பதிவின்போது, ஓட்டளிப்பு, கட்டுப்பாடு, ஓட்டு உறுதியளிப்பு ஆகிய இயந்திரங்கள், மின்விளக்கு, மின் விசிறி பயன்பாட்டிற்காக, தடையற்ற மின்சாரம் அவசியம். எனவே, மின் வாரிய நிர்வாகத்தினர், ஓட்டுச்சாவடி மின் இணைப்பு, அருகாமையில் உள்ள மின் மாற்றி, மின் கம்ப இணைப்பை ஆய்வுசெய்து, பழுதுநீக்கி சீரமைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE