காஞ்சிபுரம் : சட்டசபை தேர்தல், நாளை நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு, பணம் பட்டுவாடா செய்கின்றனர்.
காஞ்சிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் ராகவேந்திரா நகர் பகுதிகளில், நேற்று மதியம், பணம் பட்டுவாடா செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.காஞ்சி தாலுகா போலீசார், அங்கு சென்றபோது, 51வது வட்ட அ.திமு.க., செயலர் குமரேஷன், 49, ஜெயலட்சுமி, 48, பா.ம.க.,வைச் சேர்ந்த அருள், 48, ஆகியோர், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க கோரி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 29 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE