புதுச்சேரி : புதுச்சேரி முழுவதும் நேற்று இரவு, ஹைடெக் முறையில் பண பட்டுவாடா ஜரூராக நடந்தது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, பறக்கும்படை அமைத்து, கண்காணித்து வருகின்றனர். ஆனால், நேற்றிரவு புதுச்சேரி முழுவதும் ஹைடெக் முறையில் கட்சி பாகுபாடின்றி பண வினியோகம் நடந்தது. கடந்த காலத்தில், வாக்காளர் பட்டியலை கொண்டு சென்று, வாக்காளர்களின் ஓட்டுக்களை சரி பார்த்து பணம் பட்டுவாடா செய்யப்படும்.இந்த முறை, ஒவ்வொரு தொகுதியிலும், வார்டு வாரியாக உள்ள வாக்காளர்கள் விபரம் அடங்கிய மொபைல் ஆப் கட்சியினர் வைத்துள்ளனர். அதில், ஒரு வார்டுக்கு ஒரு நபரை நியமித்து, மொபைல் அப்ளிக்கேஷனில், வாக்காளரின் எண்ணை பதிவிட்டு சரி பார்க்கின்றனர்.
தகுதியான வாக்காளர் என்பது உறுதியானதும், ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை பட்டுவாடா நடந்தது. தேர்தல் துறை பறக்கும் படையும், ஆங்காங்கே சிலரை பிடித்து போலீசில் ஒப் படைத் தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE